மக்கள் தொகை அதிகம் உள்ள தொகுதிகளில் ஆளும்கட்சி அமைச்சர் மற்றும் எம்எல்ஏவாக இருப்பவர்கள் தமிழக அரசு மூலம் கூடுதலாக நிதியை ஒதுக்கி சமாளித்து விடுவார்கள். அதுவே எதிர்கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் தமக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியின் மூலமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பல்வேறு சிரங்களை சந்திக்க வேண்டி வரும்.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் தென் சென்னை தெற்கு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட மிகப்பெரிய தொகுதியில் சென்னை மாநகராட்சியை சேர்ந்த 20 வட்டங்கள் 14 மற்றும் 15 என இரு மண்டலங்கள் பரங்கிமலை ஒன்றியத்ததை சேர்ந்த ஏழு ஊராட்சிகள் உள்ளது.
கடந்த 2006 திமுக ஆட்சியில் இருந்த போது காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக இருந்த தாம்பரம் தொகுதியை பிரித்து, சோழிங்கநல்லூர் தொகுதியாக தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது.
2011 சடட்டசபை தேர்தலில் இத்தொகுதியை அதிமுக கைப்பற்றினாலும் 2016 சட்டசபை பொதுத் தேர்தலில் சோழிங்கநல்லூர் திமுகவின் மத்திய பகுதி செயலாளரான எஸ்.அரவிந்த்ரமேஷ் எம்எல்ஏவாக வெற்றி பெற்று திமுகவின் கோட்டையாக்கியுள்ளார்.
ஆளும்கட்சியை மிரளவைக்கும் திமுக எம்எல்ஏ